Conducted by Tr.Suganya - Ariyalore Dis
Conducted by Tr.Suganya - Ariyalore Dis
நோக்கம்
இயற்கையைப் பற்றிய புரிதலும், இயற்கை அழகை ரசித்து மகிழவும், இயற்கையை பாதுகாத்து பயன்படுத்தி வளரவும் செய்தல்.
தன் சுத்தம் தொடங்கி சுற்றுப்புறத் தூய்மை வரை தங்களின் பங்கு என்னவென்று அறிந்து கொள்ளச் செய்தல்.
பயன்கள்
மாணவர்களிடம் இயற்கை சார்ந்த நேர்மறையான சிந்தனைகள் உருவாகிறது.
இயற்கை வளங்களை பாதுகாத்து முறையாக பயன்படுத்தும் திறன் வளர்கிறது.
இயற்கை சார்ந்த மாசுபாடுகள் குறைக்கப்பட்டு தன் சுத்தம், சுற்றுப்புற தூய்மை பேணி பாதுகாக்கப்படுகிறது.
பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக செலவினங்கள் குறைக்கலாம் என்ற சிந்தனை அறிகின்றனர்.
இயற்கையோடு இயைந்து வாழ்வதால் உடல் நலமும் மன நலமும் மேம்படும் என்ற மனநிலை உருவாகிறது.
இயற்கை சார்ந்த நடைமுறை பிரச்சனைகளுக்கு தாங்களாகவே தீர்வு காண்பதால் படைப்பாற்றலும் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் தோன்றுகிறது.
வழிமுறைகள்
மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டப்படுகிறது.
ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
நீலக் கோளை பசுமையாக மாற்றும் செயல்பாடுகள் பல தரப்படும். அதிலிருந்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள செயல்பாடுகளை தெரிவு செய்து கூறப்படும் வழிமுறைகளின் படி மேற்கொள்ளவேண்டும்.
உதாரணமாக சில செயல்படுகளின் பட்டியல்:- வீட்டுத் தோட்டம் அமைத்தல், மறுசுழற்சி கைவினை பொருட்கள் செய்தல், விதை சேகரித்தல், விழிப்புணர்வு செயல்பாடுகள்.. மேலும் பல
நன்றி