Conducted by Tr.Kanchana - Tiruvannamalai DIS
Conducted by Tr.Kanchana - Tiruvannamalai DIS
நோக்கம்
🟪பொது நோக்கங்கள்: மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம், வாய்மொழி பயிற்சி, நூல் திறனாய்வு மனப்பான்மை போன்றவைகளை மேம்பட செய்தல்
🟪சிறப்பு நோக்கங்கள்: மாணவர்களின் அறிவு- பண்பாட்டு வளர்ச்சி, படைப்பாற்றலை வளர்த்தல், நினைவாற்றலும் நடிப்பாற்றலும் வளர்த்தல், கற்பனை ஆற்றலை வளர்த்தல், சொற்களஞ்சிய பெருக்கம், நாட்டுப் பற்றினை வளர்த்தல், மகிழ்ச்சியூட்டல், அன்பை வளர்த்தல், உணர்ச்சி வெளியீடு, கவனிக்கும் திறன், நற்குணப் பயிற்சி போன்றவை இதன் சிறப்பு நோக்கங்களாக அமைகின்றன.
பயன்கள்
🟡மாணவர்களை புத்தகங்களை வாசிக்கவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அதனை திறனாய்வு செய்வதற்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஒவ்வொரு புத்தகத்தின் கருத்துக்களும், தகவல்களும் மாணவர்களை சென்றடைகிறது.
🔵மாணவர்கள் கதையைப் படித்து கூறுவதால் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ள உதவுகிறது
🟢வரலாறு பண்பாடு மற்றும் சமூக மதிப்புகள் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது
🟡தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழிவதை செய்கிறது
🔵கதை கூறுதல் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் மகிழ்விக்கும்.
🟢மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும்.
🔴மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும்.
🟢மாணவர்களிடையே சமூக ஒற்றுமையை வளர்க்க உதவும்.
🟣மாணவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது.
🔵கதை கூறுவதால் புதிய பார்வைகளையும் வித்தியாசமான அணுகு முறைகளையும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
🟣மாணவர்கள் குரல் பதிவு செய்வதால் அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு தன்னார்வமாக பங்கேற்கின்றனர் (கற்றலில் இனிமை கற்பித்தலில் புதுமை).
🥎மாணவர்களின் குரல் பதிவுகளை இணைய பக்கத்தில் பதிவேற்றி வைப்பதன் மூலம் கல்வி அலுவலர்களும் பெற்றோர்களும் எங்கிருந்தும் எப்போதும் கேட்கலாம் மாணவர்களின் வாசித்தல் திறனின் நிலை மேம்பாட்டினை அறியலாம் (ஆவணம்)
🥎மாணவர்கள் தனது செயல்பாட்டை தானே குரல் பதில் கேட்கும் போது மன மகிழ்ச்சி அடைவர் மேலும் தனது பேச்சில் உள்ள கருத்துப் பிழையை அடையாளம் காண்பவர் (சுயமதிப்பீடு)
பகுதிகள் [Name of Programs]
மாணவர்களுக்கான செயல்பாடுகள்
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாசிப்பு இயக்கம் புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ் போன்ற பள்ளிக்கல்வித் துறை சார்பான புத்தகம், நூல்கள், இதழ்கள் போன்றவற்றிலுள்ள பகுதிகளையும்,
வீட்டிற்கு அருமை நூலகங்களையும், செய்திதாள்கள், சிறுவர் மலர்/வாரமலர்கள் போன்றவைகளை பயன்படுத்திகொள்ள
மாணவர்களை / பிள்ளைகளை வழிகாட்டிகள் அறிவுறுத்தவேண்டும்.
நூல்கள் வாசித்தல்
மாணவர்கள் தனக்கு விருப்பமான பகுதியை தேர்தெடுத்து வாசிக்கவும். பல முறை படித்துப்பார்க்கவும், பொருள் புரிந்து குரல் ஏற்றத்தாழ்வுடன் வாசிக்கும் பயிற்சி பெற்றவுடன் அதனை தெளிவாக குரல்பதிவு செய்யவும்..
நூல் திறனாய்வு செய்தல்
மாணவர்கள் மேலே தான் தேர்தெடுத்து படித்த நூலினை பற்றிய தகவல்கள், கருத்துகளை எழுதி , அதனை தெளிவாக குரல்பதிவு செய்யவும்.. [நூல் ஆசிரியர் பெயர், அதன் அமைப்பு பற்றிய தகவல்கள் & நூலில் உள்ள கருத்துகள் பற்றியும், அதன் மூலம் மாணவர்கள் தான் அறிந்த கற்று கொண்டவைகள் பற்றியும் எழுதுவது போன்றவை நூல் திறனாய்வு ஆகும்]
வழிமுறைகள் [One time Registration]
தனது மாணவர்களை / பிள்ளைகளை அவர்களின் தன்னார்வத்துடன் பங்கேற்க செய்வதற்கு விரும்பும்
வழிகாட்டும் நபர்கள் முதலில் தங்களையும் ,
தன்னார்வமாக பங்கேற்வுள்ள தனது மாணவர்கள் / பிள்ளைகளின்
தகவல்களை பதிவு செய்துகொள்வது முக்கியமானது..
இதுவரை பதிவு செய்யவில்லை எனில்
வழிமுறைகள்
🔵 மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டப்படுகிறது.
🟢ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
நூல் வாசிப்பு
மாணவர்கள் ஒவ்வொரு Audio-வின் தொடக்கத்திலும் வணக்கம் என்று ஆரம்பித்து தொடர்ந்து
நான் ___________ நூலக புத்தகத்தை ____________ பகுதியை வாசிக்க போகிறேன்
என்று கூறவேண்டும்.
பிறகு
மாணவர் பெயர், வகுப்பு, பெற்றோர் பெயர், தலைமையாசிரியர் பெயர் , ஆசிரியர் பெயர், பள்ளியின் பெயர், ஒன்றியம், மாவட்டம்– போன்றவற்றைக் கூறவும்.
பின்பு “எனது குரல் இணையவழிக் கல்விவானொலி Online Kalviradio www.kalviradio.com ல் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூற செய்யவும்.
பிறகு குரல் பதிவு செய்யவுள்ள பகுதிகளை வாசிக்கவும். இறுதியாக.
மிக சிறப்பான நூலகப்புத்தகங்களை வழங்கிய கல்விதுறைக்கும், எங்கள் ஆசிரியருக்கும் நன்றி. வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி
என்று கூறி நிறைவு செய்ய வேண்டும்.
நூல் திறனாய்வு
மாணவர்கள் ஒவ்வொரு Audio-வின் தொடக்கத்திலும் வணக்கம் என்று ஆரம்பித்து தொடர்ந்து
நான் ___________ நூலக புத்தகத்தை பற்றிய கருத்துகளையும், தகவல்களையும் கூற போகிறேன்
என்று கூறவேண்டும்.
பிறகு
மாணவர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், ஒன்றியம், மாவட்டம்– போன்றவற்றைக் கூறவும்.
பின்பு “எனது குரல் இணையவழிக் கல்விவானொலி Online Kalviradio www.kalviradio.com ல் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூற செய்யவும்.
பிறகு தனது குரல் பதிவு செய்யவுள்ள நூல் திறனாய்வை வாசிக்கவும். இறுதியாக.
வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி
என்று கூறி நிறைவு செய்ய வேண்டும்.
வழிமுறைகள் [Instructions]
Google Drive ல் பதிவேற்றி வைக்கவும்
நூலின் முகப்பு அட்டை
நூல் வாசிப்பு குரல்பதிவு
நூல் திறனாய்வு எழுதிய தாள்
நூல் திறனாய்வு குரல்பதிவு
போன்றவைகளை தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் என அனைவரும் தங்களின் Google Drive ல் Book Bees program என்ற பெயரில் Folder உருவாக்கி அதனுள் பதிவேற்றி வைக்கவும்.
Google Drive ல் Folder எவ்வாறு உருவாக்குவது?
அந்த Folder குள் Audio & மற்ற படைப்புகளை எப்படி பதிவேற்றுவது?
அந்த Folder யை எப்படி KR Teamக்கு பகிர்வது?
போன்றவற்றிற்கான காட்சி படங்களுடன் விளக்கம்கொண்ட PDF கீழே உள்ளது.
👇👇👇👇👇👇👇
https://drive.google.com/drive/folders/1cUMmkY1W850A6KGttYifwhDLDVC5fk0W?usp=sharing
வழிமுறைகள் [Instructions]
குரல் பதிவுகளை அனுப்புவதற்கான வழிமுறைகள்
மேலே கூறப்பட்ட வழிமுறைப்படி குரல்பதிவுகளை பதிவேற்றிய பின்னர்
தகவல்களையும், குரல் பதிவின் File Link ஐயும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form- ல் பதிவேற்றவும்
Final Submission Form
புத்தகத் தேனீக்கள் / Book Bees Program
Final Submission Form - Click Below
தகவல்கள் அறிய Whatsapp Groups [Get More Updates] https://chat.whatsapp.com/GUBG6CMH1112bS9qcnsBBy
நன்றி